உடனடியாக சர்வக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கு கடிதம்

பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய உடனடியாக சர்வக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை கேட்டுள்ளது.

அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு தேர்தலை நடத்துவது குறித்து உயர் நீதிமன்றத்தின் வியாக்கியனத்தை கேட்குமாறு ஜனாதிபதிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பிய கடிதம் குறித்து ஜனநாயகத்தை மதிக்கும் அனைவரும் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை தமது கட்சி பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளதோடு, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை தற்போதைய நிலையில் நடத்த முடியாது எனவும் அவர் கேட்டுள்ளார்.

ஆகவே இது தொடர்பில் கலந்துரையாடவே சர்வகட்சி கூட்டத்தை நடத்துமாறு தான் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -