கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மூலிகைப் பானம்.



எச்.எம்.எம்.பர்ஸான்-
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் ஆயுர்வேத மருந்தகங்களில் சிகிச்சை பெற வருபவர்களுக்கு மூலிகைப் பானங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தில் திங்கட்கிழமை (6) சிகிச்சைக்காக வருகை தந்த மக்களுக்கு குறித்த மூலிகைப் பானங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ஆயுர்வேத சுதேச மருத்துவ திணைக்களத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட மூலிகைப் பானத்தை நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.றிகாஸ் அவர்களின் தலைமையில் வருகை தந்த நோயாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -