ஹட்டன் கே.சுந்தரலிங்கம் -
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் ரூவன்புர பகுதியில் வசித்து வந்த சுமார் ஒன்றரை வயது சிறுமி ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து கொரோனா வைரஸ் சந்தேகத்தில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் இன்று (25) இரவு 7.00 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பகமுவ பிரதேச கடமை மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் காமதேவன் தெரிவித்தார்.
வேலிசர கடற்படை முகாமிலிருந்து கினிகத்தேனை கொத்தல்ஹேன பகுதிக்கு அவர்களுடைய வீட்டுக்கு கடற்படை இரானு சிப்பாய்கள் இருவர் வருகை தந்துள்ளனர்.இவர்கள் வருகை தந்ததினையடுத்து குறித்த கடற்படை முகாமில் உள்ள சில கடற்படை சிப்பாய்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டதனையடுத்து இந்த கடற்படை முகாமிலிருந்து வீடுகளுக்கு சென்றவர்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இந் நிலையில் கொத்தல்ஹேன பகுதியில் குறித்த கடற்படை வீரர்கள் நெருக்கமாக பழகிய 07 வீடுகளை சேர்ந்த 20 பேர் இன்று (25) பொது சுகாதார பரிசோதகர்களால் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் நாளை (26) திகதி பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் ஹட்டன் ருவன்புர பகுதியில் வசிக்கும் குறித்த கடற்படை வீரர் ஒருவரின் உறவினர் ஒருவர் கடந்த 20 திகதி வீட்டுக்கு வந்த கடற்படை வீரரை பார்க்கச் கணவன் மனைவி தற்போது காய்ச்சளால் பீடிக்கப்பட்டுள்ள குழந்தை அவரது வீட்டுக்கு சென்றுள்ளதுடன் அவருடன் நெருங்கி பழகியுள்ளனர். இந்நிலையில் அவ்வீட்க்கு சென்ற ஒன்றரை வயது குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதனையடுத்தே இக்குழந்தையினை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வீட்டில் வசிக்கும் கணவன் மனைவி,உட்பட இரண்டு பிள்ளைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வருகை தந்த கடற்படை வீரர்களில் ஒருவர் கொரோ தொற்று ஏற்பட்ட ஒரு வீரருடன் நெருங்கி பழகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.