கொரோனா வைரஸை ஒழிக்க அரசாங்கம் எடுத்துவரும் அனைத்து நடவடிக்கைகளையும் வரவேற்பதாக முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பி முன்னாள் சபாநாயகர் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி செயற்பாடுகளை ஒத்திவைத்து கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் எனவும் கரு ஜயசூரிய தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை வழங்கும் போது சுகாதார துறையினரும், பாதுகாப்பு பிரிவினரும் செயற்படும் விதம் தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர்களின் சேவையை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -