கொரோனா வைரஸ் நோயாளிகளை எளிதில் அடையாளம் காண புதிய தொழிநுட்பம்!

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

கொரோனா வைரஸ் பரவியுள்ளவர்களின் நடமாட்டம் மற்றும் வழித் தடங்களை எளிதில் அடையாளம் கண்டு, மக்களை உஷார் படுத்தும் புதிய தொழில் நுட்பத்தை அப்பிள் நிறுவனமும், கூகுள் நிறுவனமும் இணைந்து, உருவாக்கி வருகின்றன.

இதற்காக பிரத்யோகமாக வடிவமைக்கப்படும் புதிய செயலி, பொது சுகாதாரத்துறையின் அனுமதிக்குப் பின் எதிர்வரும் மே மாதத்தில் உலகுக்கு அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டுமென்ற உயரிய நோக்கத்திற்காக மிகப்பெரிய இவ்விரு நிறுவனங்களும் இணைந்து இப்பணியில் களமிறங்கியுள்ளன. 

ஐ-போன் மற்றும் ஆண்ட்ரோய்ட் கையடக்க தொலைப்பேசிகளில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டால், அருகே கொரோனா வைரஸ் பரவியுள்ளவர்கள் யாராவது இருந்தால், நம்மை விலகி செல்லுமாறு அறிவுறுத்தும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -