முன்னர் - இரண்டாம் தவணை, ஏப்ரல் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதாகத் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டிருந்த நடவடிக்கைகளில் முதற்கட்டமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது இந்த விடுமுறை மாணவர்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்வதற்காக நீடிக்கப்பட்டுள்ளது. பாடசாலை விடுமுறை காலங்களில் மாணவர்களுடைய கல்வி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்கு சம்பந்தமான முன்னெடுப்புக்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கும் திகதி சம்பந்தமாக பல்கலைக்கழக அதிகாரிகள் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவுரைக்கிணங்க மீளாய்வு செய்யுமாறு உயர்கல்வி அமைச்சின் மூலம் கேட்கப்பட்டுள்ளனர்.
