டிக்கோயா தரவளை கிராமத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கி வைப்பு


 கே.சுந்தரலிங்கம் -

திகா-உதயா நிவாரண திட்டத்தின் கீழ் டிக்கோயா தரவளை கிராமத்தைச் சேர்ந்த 60 குடும்பங்களுக்கு இன்று (10) திகதி வழங்கி வைக்கப்பட்டன.
நிவாரண பொதிகளை தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் வழங்கினார்.

டிக்கோயா தரவளை கிராம மக்கள் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் ஆகியோருடன் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க இந்த நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வின் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சோ. ஸ்ரீதரனுடன் , உதயகுமாரின் செயலாளர் ஸ்ரீPதரன், மகளிர் பிரிவு இணைப்பாளர் திருமதி உஷா, மாவட்ட தலைவர் செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -