நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் எதிர்கொள்ள ஏற்பாடுகள் - தனியார் வைத்தியசாலைகளிலும் PCR பரிசேதனை


கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமாயின் அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றை கண்டறிவதற்கான PCR பரிசேதனையை தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க தீர்மானித்துள்ளது. இந்த பரிசோதனையை தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்வதற்கு 3 நிபந்தனைகளை அரசாங்கம் விதித்துள்ளது.

1. இது ஸ்கீன் ரெஸ்ட் அல்ல.
2. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் மாத்திரமே இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும்.
3. நோயை அடையாளம் கண்டு அது தொடர்பான அறிக்கையை அரசாங்கத்தின் தொற்றுநோய் ஆய்வு பிரிவிற்கு சமர்ப்பிக்க வேண்டும். அது மாத்திரமன்றி பரிசோதனைக்கு உட்படுத்துவோர் விபரங்கள் பரிசோதனைக்கு முன்னதாக எமது பிரிவிற்கு சமர்ப்பிக்க வேண்டும். பரிசோதனை நிறைவடைந்த பின்னர் முழுமையன அறிக்கையை எமது பிரிவற்கு அறிவிக்க வேண்டும். 24 மணித்தியாலத்துக்குள் பரிசோதனை தொடர்பான அறிக்கையை நோயாளிக்கு வழங்க வேண்டும். இத்துறையை சேர்ந்த விசேட வைத்தியர் ஒருவரின் பொறுப்பில் இது நடத்தப்படவேண்டும். நோயாளியின் சளி எமது ஆய்வு பிரிவிற்கு ஒப்படைக்கப்படவேண்டும். இந்த பரிசேதனைக்காக 6,000 ரூபா மாத்திரமே அறவிடப்படவேண்டும்.

இந்த நிபந்தனைகளுக்கு அமைவாக செயற்படாத தனியார் வைத்தியசாலைகளுக்கான அனுமதி மறுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -