தானதர்மங்களினூடாகவே தன்னை மக்களோடு இணைத்துக்கொண்டு செயற்படும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதி பொருளாளரும் சமூக சிந்தனையாளரும் தொழிலதிபருமான அல் ஹாஜ் ஏ.சி.யஹ்யாகான்,அவர்களின் அல்லலுற்றிரிக்கும் மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்க நிகழ்வு, 2020.03.26 ஆம் திகதி சாய்ந்தமருதில் உள்ள அவரது பணிமனையில், பௌண்டேசனின் செயலாளர் ஏ.சி.எம்.றியால் தலைமையில் இடம்பெற்றது.
உலகை குறிப்பாக இலங்கையை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் மற்றும் அச்சுறுத்தலின் காரணமாக மக்கள் அச்சமடைத்த நிலையில் காணப்படுகின்ற இச்சந்தர்ப்பத்திலும் அரசினால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம் காரணமாகவும் அநேக மக்கள் அன்றாட உணவுத்தேவைக்குக்கூட மிகுந்த சிரமத்தை அடைந்துவரும் இந்த சந்தர்ப்பத்தில் தொழிலதிர் அல் ஹாஜ் ஏ.சி.யஹ்யாகான் அவர்கள் எடுத்துள்ள முயச்சியை பலரும் பாராட்டுகின்றனர்.
தன்னால் முடியுமான உதவிகளை பல்வேறு மட்டங்களில் செய்துவரும் யஹ்யாகான் தனது முகநூலின் ஊடாக துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு உதவ தான் தயாராய் இருப்பதாகவும் அவைகளை சாய்ந்தமருது பள்ளிவாசலின் ஊடாக செய்ய விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
மக்கள் மிகுந்த துன்பியால் நிலையில் இருக்கின்ற இந்தசந்தர்ப்பத்தில் பொது நிறுவனங்கள் இவ்வாறானவர்களின் உதவிகளையும் பெற்று மக்களின் துயர் துடைக்க முன்வரவேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -