2 மணி வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக நீக்கம்


கொழும்பு களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் 2 மணிக்கு அமலாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட மாவட்டங்களில் இவ்வாறு மீள அமலாக்கப்படும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மார்ச் மாதம் காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் அன்றையதினம் 2 மணிக்கு அமலாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் மீண்டும் இன்று மதியம் 2 மணிக்கு அமுலாக்கப்படும் எனவும் அது மீண்டும் மார்ச் மாதம் 30 ஆம் திகதி காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினமே மதியம் 2 மணிக்கு மீண்டும் அமலாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்களது வீடுகளில் இருந்தவாரே கொள்வனவு செய்ய முடியும் எனவும் தட்டுப்பாடின்றி பொருட்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -