புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் 2 மணிக்கு அமலாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பிட்ட மாவட்டங்களில் இவ்வாறு மீள அமலாக்கப்படும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மார்ச் மாதம் காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் அன்றையதினம் 2 மணிக்கு அமலாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் மீண்டும் இன்று மதியம் 2 மணிக்கு அமுலாக்கப்படும் எனவும் அது மீண்டும் மார்ச் மாதம் 30 ஆம் திகதி காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினமே மதியம் 2 மணிக்கு மீண்டும் அமலாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்களது வீடுகளில் இருந்தவாரே கொள்வனவு செய்ய முடியும் எனவும் தட்டுப்பாடின்றி பொருட்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.