தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு பதுளை புகையிரத வீதிக்கு சமீபமாக சென்கிளையார் பகுதியில் இனந்தெரியாதவர்கள் ஊரடங்கு சட்டும் அமுலில் உள்ள காலப்பகுதியின் போது வைக்கப்பட்ட தீ காரணமாக காட்டுப்பகுதியில் பல ஏக்கர் காட்டுப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தீயினால் புகையிரத சமீஞ்ஞைகளுக்கு சேதங்கள் ஏற்படவில்லை.
இச் சம்பவம் இன்று 23 பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளம
எனினும் மேல் கொத்மலை ஆற்றுக்கு நீர் வழங்கும் நீருற்றுக்கள் அறியவகை தாரங்கள்.மூங்கில்கள்,சிறிய வகை உயிரினங்கள் ஆகிய அழிவடையும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளன.
குறித்த காட்டுப்பகுதிக்கு மான், முயல் போன்ற மிருகங்களை வேட்டையாடுவதற்கு அல்லது மழை வரும் என்ற மூடநம்பிக்கை வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.