1. இலங்கைக்கு வரும் அனைத்து விமானங்களையும் மார்ச் 18ஆம் திகதி நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்த வேண்டும்.
2. அதிக ஆபத்து கொண்ட நாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்து, தனிமைப்படுத்தப்படாது தம்மை மறைத்திருக்கும் ஆட்களை, பொது மக்களின் விழிப்புணர்வின் ஊடாக, பொது மக்களின் உதவியுடன் தேடுவது.
3. அத்தியாவசிய சேவைகள், மற்றும் பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் பொது மக்களின் அன்றாட வாழ்வைச் சீர்குலைக்காமல் தொடருவதை உறுதிப்படுத்தல்.
4. போலிச் செய்திகளையும் வதந்திகளையும் பரப்பி - பொது மக்களிடத்தில் தேவையற்ற அச்சத்தைத் தூண்டுவோர் மீது உடனடி கடும் நடவடிக்கை எடுத்தல்.
5. சமூக ஒன்றுகூடல்கள், கொண்டாட்டங்கள், பெரிய அளவிலான கூட்டங்கள் போன்றவற்றைக் குறைத்தல்.
6. தற்போது இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள 300 யாத்ரீகர்களை உடனடியாகத் திரும்ப கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்.
