தற்பொழுது அமுலில் காணப்படும் ஊரடங்கு சட்டம் காரணமாக நாளாந்த பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. அன்றாட வாழ்க்கைச் செலவுகளை மேற்கொள்வதில் பாரிய பிரச்சினைகளுக்குப் பொதுமக்கள் முகம் கொடுத்துள்ளனர்.
இந்த நிலைமையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், குருநாகல் நகரசபைக்கு உட்பட்ட 1000 வறிய குடும்பங்களுக்கு, பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி நிதியிலிருந்து 50% ஐ ஒதுக்கி, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு, வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் இன்று (25) இடம்பெற்றது.
குருநாகல் மேயர், ஆளுநரின் இணைப்புச் செயலாளர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -