சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீதுக்கும் முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் புதல்வரும் பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான றிஸ்லி முஸ்தபாவுக்கு மிடையிலான சந்திப்பு இன்று (25) புதன்கிழமை போரத்தின் தலைவர் இல்லத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பிலான செய்திகள் இன்று சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகள் அதிகம் உலா வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. இந்நிலையில் பிராந்திய ஊடகவியலாளர்கள் களத்தில் நின்று மக்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்குவதையிட்டு அவர்களின் பணிகளை மெச்சுவதாக தெரிவித்தார்.
சிலோன் மீடியா போரத்தின் செயற்பாடுகள் குறிப்பாக ஊடகவியலாளர்களின் நலன்கள் குறித்து அதீத அக்கறையுடன் செயற்படுவதையிட்டு பாராட்டுகின்றேன். மேலும் காலத்திற்கேற்ற திட்டங்களை வகுத்து போரத்தின் தலைவர் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதானது என்னை வெகுவாக கவர்ந்துள்ளது எனவும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த போராடும் சுகாதார துறையினர், பொதுத்துறையினர் உள்ளிட்ட முப்படைகளின் அர்ப்பணிப்பான பணியினை பாராட்டுவதாகவும் தொவித்தார்.
கொரோனா வைரஸ் அனர்த்தம் தொடர்பில் உண்மையான செய்திகளை மக்கள் முன் கொண்டுவரும் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு என்னால் முடியுமான உதவிகளை வழங்குவதற்கு என்றும் தயாராகவுள்ளேன் எனவும் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் நடுநிலையானவர்கள். கட்சி பேதங்களுக்கு அப்பால் எனது வெற்றிக்கு தங்களாலான ஊடக உதவிகளை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இதன்போது சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத் போரத்தின் செயற்பாடுகள் அடங்கிய கைநூலினை றிஸ்லி முஸ்தபாவிடம் வழங்கி வைத்தார்.