புதிய அரசின் நடவடிக்கை சர்வதிகாரபோக்கை வெளிக்காட்டுகிறது- ஹாபிஸ் நஸிர் அஹமட்

'அரசியல் தீர்வு தருவோம் என்ற உத்தரவாதம் எதனையும் முன்வைத்து புதிய ஜனாதிபதி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை எனவே எவரும் அதற்கான அழுத்தங்களை பிரயோகிக்ககூடாது' எனத் தகவல் தொடர்பாடல் அமைச்சர் தெரிவித்திருப்பது சர்வதிகாரபோக்கை வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து இனமக்களதும் பிரச்சினைகளையும் உணர் ந்து அவற்றுக்கான தீர்வினை ஏற்படுத்தவேண்டியது ஜனாதிபதினதும் அரசினதும் கடமையாகும். நாட்டில் வாழும் இனங்களின் தலைமைகள் தமது மக்களின் அபிலா iஷகளை எடுத்து இயப்புவதும் அதற்கான தீர்வைக் கோரிநிற்பதும் அவர்தம் ஜனநாயகக் கடமையாகும். 

அந்தக் கடமையைச் செய்ய முற்படுவோரை அதிகாரப் போக்கில் தடுத்த நிறுத்த நினைப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத அரசியல் கலாசாரம் ஆகுமென கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீல.முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸிர் அஹமட் தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இந்த நாட்டில் நீண்டகாலமாகச் சிறுபான்மை இனங்கள் தமக்கான அதிகார பரவா க்கல் குறித்து குரல் எழுப்பி வருகின்றன. இதற்கான தீர்வை எட்டி இப் பிரச்சினை க்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வேண்டும் என்பது அவற்றின் எதிர்பார்ப்பாக இரு க்கிறது. இந்நிலையில், அரசியல் தீர்வுகள் குறித்து எமக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என அரசின் பிரதிநிதியான அமைச்சர் தெரிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தாகும்.

எந்தச் சமூகம் தனது பிரச்சினையை ஆளும் தரப்பிடமே முன் வைக்க முடியும். அதனை சரிவர அறிந்து அவற்றிக்குத் தீர்வுதரவேண்டியது ஆட்சியில் இருக்கும் அரசின் பொறுப்பாகும். அதனை விடுத்து அழுத்தம் கொடுக்கக்கூடாது கோரிக்கை வைக்கக்கூடாது எனத் தெரிவிப்பது ஆணவத்தின் வெளிப்படாகும். இதனை ஜனநா யக ரீதியாக நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

'இந்த நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களும் நான் ஜனாதிபதி, எனவே அனைவ ரும் என்னுடன் இணைந்து செயற்பட முன்வாருங்கள் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவரது பதவிஏற்பு தொடக்கம் நடந்த முடிந்த சுதந்திரதின உரை முதல் அழைப்பு விடுத்து வருகின்;றார். அவரது நல் எண்ணத்தை சிறுபான்மை சமூகங்கள் பெரிதும் வரவேற்றுள்ளன.

இந்நிலையில் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலர் இனங்க ளுக்கிடையிலான புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் குலைக்கும் வகையில் கருத்துக்களை முன்வைத்து வருவது பெரும் கவலையை அளிக்கிறது.

எனவே, இத்தகைய கருத்து பகிர்வுகளைத் தவிர்த்து அனைத்து இன மக்களும் ஒன்றுபட்டு செயற்படும் எண்ணவோட்டங்களை விதைத்து இந்த நாடு ஜனநாய கத்தின் அடையாளமாக உலக அரங்கில் வலம்வர ஆவன செய்யவேண்டும்- என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -