ஜனாதிபதியின் நஞ்சற்ற உணவு விவசாய அறுவடை விழா..

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

னாதிபதியின் நஞ்சற்ற உணவு உற்பத்தி வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தோட்டங்களின் அறுவடை விழா மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றது.

இந்தவகையில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களம் மற்றும் வாழைச்சேனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் ஏற்பாட்டில் விவசாய அறுவடை விழா ஓட்டமாவடி மஜ்மா கிழக்கு சுபைர் காஜியார் தோட்டத்தில் இடம் பெற்றது.

தியாவட்டவான் விவசாய போதனாசியர் எம்.ஜமால்டீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விவசாய திணைக்கள உதவி விவசாயப் பணிப்பாளர் ஈ.சுகந்ததாசன், வாழைச்சேனை விவசாய போதனாசிரியர்களான எஸ்.சிரிகண்ணன், எச்.எம்.றியாழ், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ.எம்.றிபாய்ஸ், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.அஸ்பர், விவசாய அமைப்பினர், கிராம மட்ட பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது நஞ்சற்ற முறையில் ஆரம்பிக்கப்பட்ட தும்பை உற்பத்தியின் மூலம் கிடைக்கப்பெற்ற தும்பை அறுவடை செய்து வைக்கப்பட்டதுடன், நஞ்சற்ற முறையில் துப்பை உட்பட தோட்டப் பயிர்களை எவ்வாறு உற்பத்தி செய்வது தொடர்பில் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்களினால் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

பெரும்பாலான தோட்டப் பயிர்களை நஞ்சு கொண்ட கிருமி நாசினிகளை தெளித்து உற்பத்தி செய்வதால் தோட்டப் பயிர்கள் நஞ்சாக உற்பத்தி செய்யப்படுவதால் இதனை உண்ணும் போது பாரிய நோய்கள் ஏற்படுவதாக விவசாய திணைக்களம் உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -