1000 ரூபா சம்பளத்தை கொடுக்க தவறும் பட்சத்தில் தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும்- அமைச்சர் பந்துல


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகங்கள் 1000 ரூபா சம்பளத்தை கொடுக்க தவறினால் தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்குமென்றும், முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் 1,300 கோடிக்கு மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் சேவைகளுக்காக நிலுவையாக ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது. இதற்காக குறை நிரப்பு பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக உயர் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன இன்று காலை தெரிவித்துள்ளார்.

இன்று காலை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இதனைத் சுட்டிக்காட்டியிருந்தார்.
தோட்ட தொழிலாளர்களின் 1,000 ரூபா சம்பள அதிகரிப்பிற்கான கொடுப்பனவு தொகை இந்த குறை நிரப்பு பிரேரணையில் உள்ளடங்கியுள்ளதா? என்று அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள்
கேட்டபோது:-
தோட்டங்கள் அரசாங்கத்துக்கே சொந்தமானவை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதனை தோட்ட நிர்வாகங்கள் நிறைவேற்ற தவறினால் தோட்டங்களை பொறுப்பேற்று அதனை இளைஞர்களுக்கு பிரித்து கொடுக்கப்படுமென்றும் ,தோட்ட தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள அதிகரிப்பில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -