உதவிதேர்தல் ஆணையாளரின் தற்காலிக அடையாள அட்டைகள் நேற்று வழங்கிவைப்பு.

காரைதீவு நிருபர் சகா-
நாளை நடைபெறவிருக்கும் 8வது ஜனாதிபதிதேர்தலில் வாக்களிப்புதற்கு தேசிய அடையாளஅட்டை இல்லாதவர்களுக்கு தற்காலிக அடையாளஅட்டைகளை உதவி தேர்தல் ஆணையாளர்கள் நேற்று வழங்கிவைத்தனர்.
அந்தந்த மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் இந்த வாக்காளரின் தற்காலிக அடையாள அட்டைகளை அந்தந்த பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைத்தனர்.
பிரதேச செயலாளர்கள் குறித்த வாக்காளர்கள் வதியும் கிராமசேவை உத்தியோகத்தர்களிடம் நேற்று ஒப்படைத்தனர்.
பொத்துவில் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் சுமார் 750 பேருக்கு இத்தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கிவைக்கப்பட்டன.
இது அவசர அரசபணியாதலால் நேற்று பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் அவற்றை கிராமசேவையாளாரின் அலுவலகங்களுக்குச்சென்று வழங்கிவைத்தார்.
கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் உதவிதேர்தல் ஆணையாளரின் ஒப்பத்துடன்கூடிய குறித்தவாக்காளரின்படத்துடன் இவ்அடையாள அட்டைகளைக்காட்டி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையகம்அறிவித்திருந்தமை தெரிந்ததே.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -