ஜனாதிபதி தேர்தலுக்காக வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு குரங்குகள் தொல்லை கொடுத்த சம்பவமொன்று இன்று (16) இடம்பெற்றுள்ளது.
கல்குடா தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கெடுப்பு நிலைய கூரையிலும் மரங்களிலும், குரங்குகள் பாய்ந்து அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
குறித்த பகுதியில் அண்மைக்காலமாக குரங்குகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோன்று இன்றையதினம் பெருந்திரளான குரங்குகள் வாக்கெடுப்பு நிலையம் அமைந்துள்ள இடத்திக்கு வந்து வாக்காளர்களுக்கு தொல்லை கொடுத்துள்ளன.
பெரிதும் அட்டகாசம் செய்த குரங்குகளை வெளியேற்ற சில இளைஞர்கள் நியமிக்கப்பட்டு குரங்குகள் வெளிவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.