வாக்கெடுப்பு நிலையத்தில் குரங்குகள் அட்டகாசம்!

எச்.எம்.எம்.பர்ஸான்-

னாதிபதி தேர்தலுக்காக வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு குரங்குகள் தொல்லை கொடுத்த சம்பவமொன்று இன்று (16) இடம்பெற்றுள்ளது.

கல்குடா தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கெடுப்பு நிலைய கூரையிலும் மரங்களிலும், குரங்குகள் பாய்ந்து அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

குறித்த பகுதியில் அண்மைக்காலமாக குரங்குகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று இன்றையதினம் பெருந்திரளான குரங்குகள் வாக்கெடுப்பு நிலையம் அமைந்துள்ள இடத்திக்கு வந்து வாக்காளர்களுக்கு தொல்லை கொடுத்துள்ளன.

பெரிதும் அட்டகாசம் செய்த குரங்குகளை வெளியேற்ற சில இளைஞர்கள் நியமிக்கப்பட்டு குரங்குகள் வெளிவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -