இவருக்கு ஒரு இலட்சம் ரூபா தண்டாப் பணமும் , 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஒரு வருட சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கிமுள்ளது.
திருகோணமலை முள்ளிப் பொத்தானை பகுதியைச் சேர்ந்த நூர் முகம்மது நசூர்தீன் வயது -62) முதியார்
ஒருவருக்கே இவ்வாறான தண்டனை வழக்கப் பட்டுள்ளது.
கந்தளாய் நீதிவான் நீதிமன்ற நீதிபதி திருமதி , திசானி தேன பது இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
இவர் கந்தளாய் , முள்ளிப் பொத்தனை பகுதியில் வெளி நாட்டு வேலை வாய்ப்பு பணியக முகவர்களுக்கு தெரியாமல் போலி முகவர் நிலையம் ஒன்றை நடாத்தி வந்துள்ளதாகவும் வெளி நாட்டு வேலை வாய்ப்பு பணியக விசேட புலனாய்வு பிரிவினரான என்.யோகேஷ்வரன் மற்றும் திசா நாயக்க , விபுல திசநாயக்க , என்பவர்களால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மிக நீண்ட காலமாக இவ் வழக்கு விசாரணை இடம் பெற்று வந்துள்ளதோடு இன்று தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.
இவர் இது போன்ற ஒரு குற்றம் ஒன்றை ஏற்கனவே நீர் கொழும்பு பகுதியிலும் குற்றம் புரிந்துள்ளதையும் இந்த நீதிமன்றம் கவனத்திற்கு கொண்டுள்ளது.