நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால் i Road திட்டத்தினுாடாக திருகோணமலை மாவட்டத்தில் கிராமிய வீதிகள் அபிவிருத்தியின் கீழ் இரண்டாவது ஒருங்கினைந்த வீதி முதலீட்டு திட்டம் காபட் வீதி, புனரமைப்பின் அங்குராா்ப்பன நிகழ்வு இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின்பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் இன்று (24) சனிக்கிழமை மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது
மூதூர் 3சீடி சந்தியில் குறித்த காபட் வீதிக்கான நிகழ்வு பிரதமரால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது. 215.93 கிலோமீற்றருக்கான காபட் வீதியே இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது
குறித்த இவ் நிகழ்வில் நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி பெற்றோலிய வளத்துறை அமைச்சர் கபீர் காசீம்,பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக்,கே.துறைரட்ணசிங்கம்,இம்ரான் மஹரூப்,சன்திப் சமரசிங்க உட்பட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரிகள்,உள்ளூராட்சிமன்ற தலைவர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.