அரசியல் பழிவாங்கல்களின் விசாரனை தீர்ப்பு கிடைத்தும் ஓய்வூதியம் கிடைக்காமல் அவதிப்படும் சிரேஷ்டன்.!


எப்.முபாரக்-
ற்போதய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் கடந்த ஆட்சியில் அரசியல் காரணங்களினால் பாதிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்களிடமிருந்து விசாரணைகள் கோரப்பட்டன, அதற்கு அமைய அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்ட திருகோணமலையை வசிப்பிடமாக உள்ள ந. ப. சிரேஷ்டன் (வயது -80) என்பவர் முன்னையை ஆற்றுப்பள்ளதாக்கு சபையில் உத்தியோகத்தராக கடமையாற்றியவர்.
28 வருடங்களாக ஓய்வூதியம் கிடைக்காமல் மிகவும் கஸ்டப்படுகின்றார் அவர் இவ்விடயம் சம்மந்தமாக கவலையுடன் குறிப்பிடுகையில்.
ஜக்கிய தேசிய கட்சியின் தலைவரின் ஆலோசனைப்படி பொதுச் செயலாளரின் கட்டளைக்கு அமைவாக அரசியல் பழிவாங்கல் விசாரணை குமுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, விசாரணை யின் அடிப்படையில் அரசியல் பழிவாங்கல் ஏற்பட்டதை உறுதி செய்து விசாரணையின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் மந்திரிசபையின் அங்கீகாரம் கிடைத்தும், பிரதம மந்திரியின் செயலாளரினால் ஓய்வூதிய பணிப்பாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தினை ஓய்வூதிய பணிப்பாளர் பல காரணங்களை முன்வைத்து நிராகரித்துள்ளார் ஆனால் இது போன்று வேறு திணைக்களங்களில் பணியாற்றியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.
ஏன் எனக்கு மட்டும் இந்த நிலை என கண்ணீர் வடித்தார் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -