மட்டக்களப்பு- ஏறாவூர்ப்பிரதேசத்தில் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆந்திகதி இரவு தமிழீழ விடுதலைப் புலிகளினால் கோரமாகப் படுகொலைசெய்யப்பட்ட 121 அப்பாவி முஸ்லிம்களது நினைவினை வருடந்தோறும் அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னின்று நடாத்துவதற்காக 'ஏறாவூர்- ஸ{ஹதாக்கள் நினைவுப் பேரவை" என்ற பெயரில் புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர்- மஸ்ஜிதுந்நூறுஸ்ஸலாம் மையவாடி பள்ளிவாயலில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் அல்ஹாஜ் எம்;எல். அப்துல் லத்தீப் இவ்வமைப்பின் தலைவராக ஏகமானதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
இவ்வமைப்பு இவ்வருடம் 29 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகளை மார்க்க அனுஷ்டானங்களுக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில் ஜனரஞ்சக அடிப்படையில் அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.
ஸ{ஹதாக்கள் நினைவு தினம் ஆண்டுதோறும் நடாத்தப்படுகின்றபோதிலும் ஏறாவூர் முஸ்லிம்களுக்கெதிராக நடைபெற்ற அநியாயங்கள் ஆவணப்படுத்தப்படவில்லை. அத்துடன் உரியமுறையில் உலகறியச் செய்யப்படவில்லை என்பனபோன்ற குறைபாடுகளைக்கருத்திற்கொண்டு இவ்வமைப்பு கருமங்களை முன்னெடுக்கவுள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் 12 ஆந்திகதி மாலை ஸ{ஹதாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள பொதுமையவாடிப்பள்ளி வாயலில் யூஎல். தாவூத் சேர் மற்றும் ஸ{ஹதாக்கள் நினைவு தின நிகழ்வுகளை நடாத்தத்திட்டமிடப்பட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டு புனித ஹஜ்ஜுப் பெருநாள் இரவு ஏறாவூர் முஸ்லிம்களின் சமூகக்குரலான கல்விமான் யூஎல். தாவூத் சேர் தமிழீழ புலிகளினால் கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
