வை.எம்.எம்.ஏ.பேரவையின் ஏற்பாட்டில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வூ

கில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் ஏற்பாட்டில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வூட்டல்திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களுக்கான பயிற்றுவிப்பு இருநாள் வதிவிடச் செயலமர்வு கடந்தசெவ்வாய்க்கிழமை(26) முதல் புதன்கிழமை(27) வரை அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் கலாநிதிஅஸீஸ் கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்றது.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் போதைப்பொருள் திட்டத்தவிசாளர் எஸ்.தஸ்தக்கீர்நெறிப்படுத்தலின் கீழ் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் தேசிய பொதுச் செயலாளர் சஹிட் எம்.ரிஸ்மிதலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் தேசியத் தலைவர்தேசபந்து எம்.என்.எம்.நபீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இறுதிநிகழ்வின் போது சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.
இச்செயலமர்வில் இருநாட்களும் போதைப்பொருள் பாவனையின் தாக்கம், இதைத்தடுப்பதற்கானவழிவகைகள்,விழிப்பூட்டல் செயலமர்வுகள்,மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் வழிமுறைகள்தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்,செயன்முறைப்படுத்தப்பட வேண்டிய நடைமுறைகள்தொடர்பான பல்வேறு விளக்கங்கள் இங்கு கலந்து கொண்ட துறைசார்ந்த வளவாளர்களால் முன்வைக்கப்பட்டன.
இச்செயலமர்விற்கு தேசிய ரீதியாகக் கிடைக்கப்பெற்ற 160 துறைசார்ந்தவர்களின் விண்ணப்பங்களிலிருந்து 47பேர் இச்செயலமர்விற்குத் தெரிவு செய்யப்பட்டனர்.அதில் 11 பேர் பெண்களுமாவர்.

இறுதி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் பயிற்சி பெற்றவர்களுக்குஜனாதிபதி செயலணிக்குழுவினால் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு போதைப்பொருள் தடுப்பு பயிற்றுவிப்பாளராகஅவரவர் பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு உள்வாங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இறுதி நிகழ்வில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் பதவி வழி உத்தியோகத்தர்கள் எனப்பலரும்கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -