திருகோணமலை மாவட்டம் மூதூர் மத்திய கல்லூரியின் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வானது இன்று (29) பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றதுடன் பிரதம அதிதியாக துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கலந்து சிறப்பித்தார்.
சுமார் 40 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளே இவ்வாறு பிரதி அமைச்சரினால் சான்றிதழ்கள், பரிசில்கள், பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
இவ் கௌரவிப்பு நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ்,பாடசாலை ஆசிரியர்கள், பெற்றார்கள், நலன்விரும்பிகள் என பல முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.