வீறுகொண்டெழுவாய் பெண்ணே புதுயுகம் காண்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின விழா

க.கிஷாந்தன்-
வீறுகொண்டெழுவாய் பெண்ணே புதுயுகம் காண்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின விழா 10.03.2019 அன்று மாலை அட்டன் டி.கே.டபிள்யூ கலாச்சார மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

இந்த விழா கட்சியின் பொது செயலாளரும், மகளிர் அணி தலைவியுமான அனுஷியா சிவராஜா தலைமையில் நடைபெற்றது.

குறித்த விழாவில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான், மத்திய மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஷ்வரன் மற்றும் இ.தொ.காவின் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அட்டன் டிக்கோயா நகர சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருடன் கட்சியின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வின் போது மகளிரது கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதோடு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் அணி தலைவி உட்பட கட்சியின் பெண் உறுப்பினர்களுக்கு பொன்னாடை போர்த்தி அவர்களின் சேவைகளை பாராட்டிய கௌரவிப்பு நிகழ்வும், இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -