ஹோட்டல் உரிமையாளர்களுடன் கல்முனை மாநகர முதல்வர் றகீப் சந்திப்பு

அஸ்லம் எஸ்.மௌலானா, யூ.கே.காலிதீன்-
ல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஹோட்டல்களின் உரிமையாளர்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று, இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது.

மாநகர சபை ஆணையாளர் எம்.சி.அன்சார், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன் உட்பட சுகாதார மேற்பார்வையாளர்களும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஹோட்டல்களில் அன்றாடம் சேர்கின்ற திண்மக் கழிவுகளை சேகரித்து அகற்றும் சேவையை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றின் உரிமையாளர்களினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
ஏலவே வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஹோட்டல்களில் சேகரிக்கப்படும் ஒரு கிலோ குப்பைக்கு ஐந்து ரூபா வீதம் சேவைக்கட்டணம் செலுத்துவதற்கு ஹோட்டல் உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்ததுடன் குப்பை அகற்றும் சேவையை மேம்படுத்துவதற்காக கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்றும் உறுதியளித்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -