திருட்டில் ஈடுபட்ட பெளத்த பிக்கு ஒருவரை மரத்தில் கட்டிவைத்த பொதுமக்கள்..

தக்ஷனா-

நிதி மோசடியில் ஈடுபட்ட பிக்கு ஒருவரை மரத்தில் கட்டி வைத்த சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது.

கொடகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கூறி, இந்த மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிதியுதவியை திரட்டிய பிக்கு ஒருவரையும் சாதாரண நபரையும் கிராம வாசிகள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொலிஸாரிடம் ஒப்படைக்கும் முன்னர் பிரதேசவாசிகள் பிக்குவின் காவி உடையை கழற்றி சாதாரண நபருடன் மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.

குறித்த பிக்குவும் சாதாரண நபரும் கிராமத்தில் கொள்ளையடிப்பில் ஈடுபட்டதாக கூறி கிராம மக்கள் அவர்களை மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.

அத்துடன் இவர்கள் விகாராதிபதியின் பெயரில் பொய்யான காரணத்தை கூறி, நிதி திரட்டியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -