நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரிலுள்ள பள்ளியினுள் சென்று ஆயுததாரி ஒருவரால்a தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீதுமிலேச்சத்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியமையை வன்மையாக கண்டிக்கின்றேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்பிரதித் தலைவரும், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்தெரிவித்துள்ளார்.
ஐரோப்ப நாடுகள் முஸ்லிம்களை உலக நாடுகளில் தீவிரவாதிகளாக சித்தரித்து காண்டியே வந்துள்ளனர். ஆனால் இன்றுநியூஸிலாந்து பள்ளிவாசலில் இடம்பெற்ற கொடூரமான துப்பாக்கி சூட்டுச் சம்பவம் பல்வேறு விடயங்களை ஐரோப்பியநாடுகளுக்குச் சொல்லியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசு இந்த மனிதாபிமானமற்ற இக்கொடூர சம்பவத்தை கண்டிப்பதுடன், இதில் ஈடுபட்டவர்கள், தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் கடுமையான முறையில் தண்டனையை அமுல்படுத்துவதற்கு நியூசிலாந்து அரசைவலியுறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
நியூசிலாந்து பள்ளிவாசலில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஷஹீதான சகோதர, சகோதரிகளுக்கும் எல்லாம் வல்லஇறைவன் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உரிய சுவர்க்கத்தை வழங்குவதோடு இதில் காயமுற்ற சகோரர்கள் அனைவரும்விரைவில் குணமடைய இறைவனிடம் கையேந்தி பிரார்த்திக்கின்றேன் எனவும் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் மேலும்தெரிவித்தார்.