இலங்கை உள்ளூராட்சிமன்ற நிர்வாக முறைமையினை எடுத்துரைக்கும் நிகழ்ச்சித்திட்ட ஆரம்ப நிகழ்வு

அகமட் எஸ். முகைடீன்-
ட்டார் நாட்டின் உயர்மட்டக் குழுவினருக்கு மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள, இலங்கையிலுள்ள உள்ளூராட்சிமன்ற நிர்வாக முறைமையினை எடுத்துரைக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (29) வெள்ளிக்கிழமை இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துசிறப்பித்த இந்நிகழ்வில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் செயிட் அலி ஸாஹிர் மௌலானா, உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எச்.டி. கமல் பத்மசிறி, இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எம்.எஸ்.எம். றிஸ்மி, தேசிய சூரா சபை பொதுச் செயலாளர் அஸ்சேக் இனாமுல்லா மஸீஹூத்தீன், கட்டார் அரச உயர் அதிகாரிகள், கட்டார் நாட்டின் மாநகர சபைகளின் முதல்வர்கள், இலங்கையிலுள்ள கட்டார் நாட்டின் தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் மற்றும் கட்டார் நாட்டின் உயர்மட்டக் குழுவினருக்கும் ஞாபகச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -