கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட முதுமானி கற்கையினை நிறைவு செய்த வை.எல்.எஸ்.ஹமீட் இன்று (2018-11-13) சட்ட முதுமானி பட்டத்தை பெற்றுள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதுமானி பட்டத்தினை நிறைவு செய்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது, கொழும்பு பல்லைக்கழக வேந்தரினால் வை.எல்.எஸ்.ஹமீட் அவர்களுக்கு குறித்த பட்டம் வழங்கிவைக்கப்பட்டது.
சட்ட ரீதியான பல்வேறு தகவல்களை யாரும் விளங்கும் படியாக மக்களுக்கு கொண்டுசெல்லும் கல்முனையை பிறப்பிடமாகக் கொண்ட ஹமீட், தனது விடாமுயற்சியின் காரணமாக குறித்த இலக்கை அடைந்துள்ளார்.