மோதலின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தம்மீது கத்தியால் தாக்க முற்பட்டதாக கூறி நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த நாடாளுமன்ற காவற்துறையில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.
இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும கையில் கத்தி வைத்திருந்தாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சபாநாயகரை தெளிவுப்படுத்த நாடாளுமன்ற காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்கும் போது கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்ற போதிலும் கத்தி போன்ற ஆயுதம் எடுத்து செல்லப்பட்டமையானது பிரச்சினைக்குரிய விடயம் என காவற்துறையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்திருந்த கத்தி நாடாளுமன்ற உணவகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டிருக்க கூடும் என சந்தேகம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவற்துறை விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன