மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா

மூகத்துக்கு முக்கிய பங்காற்றும் உலமாக்கள் தொழில்நுட்ப, பொறியியல் துறைசார் கல்வியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன் அதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி பதில் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவில் 17 பேரும், கணித அளவியலாளர் பிரிவில் 7 பேரும் உள்ளடங்களாக 24 பேருக்கு பட்டமளிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
இலங்கையில் அறபு மத்ரஸாக்களில் இருந்து வெளியேறுகின்ற உலமாக்கள் தகவல் தொழில்நுட்ப, கட்டிட நிர்மாண, பொறியியல் துறைகளில் நிபுணத்துவம் உள்ளவர்களாக மாற்ற வேண்டும். அதன் மூலம் உலமாக்கள் சமூக அந்தஸ்த்துள்ள நல்ல தொழில்களைப் பெற்றக்கொள்ள வேண்டும்.
இதன் அடிப்படையில் எமது நீண்ட கால சிந்தனைக்கு அமைவாகவே மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இலங்கையில் ஐந்து பல்கலைக்கழக கல்லூரிகளை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்தது. அப்போது, ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக விடயப்பரப்புக்கு பொறுப்பான முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுடன் நாங்கள் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தமொன்றை மேற்கொண்டு இந்த மட்டகளப்பு பல்கலைக்கழக கல்லூரியை ஆரம்பித்தோம்.
இதில் தொழில்நுட்ப பாடங்களும், கட்டிட நிர்மாண, பொறியியல் துறை சார்ந்த பாடங்களும் கற்பிக்கப்டுகின்றதுடன், அரசாங்க வரையறைக்குள் அது சிறப்பான முறையில் இயங்கி வருகின்றது.
உயர் நிலை டிப்ளோமா கற்கைநெறிகளை மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியில் பயில முடியும். அதற்கு அப்பால் சென்று பட்டப்படிப்பினை தொடரும் வகையில் மட்டக்களப்பு கெம்பஸினை நாங்கள் ஆரம்பிக்கவுள்ளோம். மட்டக்களப்பு கெம்பஸ் வெகு விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். – என்றார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -