இன்பராசா-கச்சாய் குமரன் போன்ற வன்மங்களை தூண்டுவோர் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும்!!


-அஷ்ஷெய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா-

நல்லாட்சியில் இனவாதிகள் முஸ்லிம்கள் மீது நினைத்த மாத்திரத்தில் தமது இனவாத வக்கிரங்களை கட்டவிழ்த்து விடுவதும், இன முறுகலை ஏற்படுத்தும் முகமாக அபாண்டமான கருத்துக்களை பரப்புவதுவதும் வாடிக்கையாகி விட்டது. 

இலங்கை வாழ் முஸ்லிம்கள் பண்டைய காலம் தொட்டு இந்த நாட்டில் சமாதானம் விரும்பும் நன் மக்களாக வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமும் இதனையே வலியுறுத்தி நிற்கிறது. ஆனால் முஸ்லிம்களின் அடிப்படை வேர் தெரியாத சில இனவாத அரக்கர்கள் இலங்கை முஸ்லிம்கள் மீதும், அவர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் வகையிலும் தொடர்ந்தேச்சையாக சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதனை இந்த அரசு உரிய முறையில் விசாரித்து தடுத்து நிறுத்த வேண்டும். 

நாட்டில் மூவினங்களும் ஐக்கியத்துடனும், நல்லிணக்கத்துடனும் வாழ்வதை அறவே சகித்துக்கொள்ள முடியாத, இன்பராசா-கச்சாய் குமரன் உள்ளிட்ட இனத்தின் பெயரால் வன்மங்களை தூண்டும், இரத்த வெறி தலைக்கேறிய மனித ஜந்துக்களை இலங்கை அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும். 

ஜெர்மன் நாட்டில் இருந்து முஸ்லிம்கள் மீது அபாண்டங்களை சுமத்தும் கச்சாய் குமரன் மீது இலங்கைக்கான ஜெர்மன் தூதரகம் ஊடாக துரிதமாக புகார் அளித்து அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்விடயத்தில் நல்லாட்சி அரசுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் அவசாரமாக அவசியமாக அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 

ஊடகப்பிரிவு 
அஷ்ஷெய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா தலைவர், இன நல்லுறவிற்கான தேசிய வேலைத்திட்டம்


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -