கந்தளாய் நகர மண்டபம் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன உறுப்பினர்களால் திறந்து வைப்பு

எப்.முபாரக்-
திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் பதினேழு கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கந்தளாய் நகர மண்டபம் இன்று(3) கந்தளாய் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன உறுப்பினர்களால் திறந்து வைக்கப்பட்டது.
மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு ஆறு வருடங்கள் கடந்த நிலையில் இன்னமும் திறந்து வைக்கப்படாத நிலையில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 10 ஆம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருகோணமலை மற்றும் கந்தளாய் பகுதிக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த நிலையிலே கந்தளாய் பிரதேசசபையின் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன உறுப்பினர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று அவசரமாக கூடிய கந்தளாய் பிரதேச சபைக் கூட்டத்தின் போது பொது ஐன பெரமுன உறுப்பினர்களால் தீர்மாணிக்கப்பட்டு நாடாவினை வெட்டி திறந்து வைத்தார்கள். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்திருந்ததும் குறீப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -