அட்டன் புகையிரத நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளின் சுற்றுலா வசதிகள் மையம் திறப்பு

க.கிஷாந்தன்-
த்திய மாகாண சுற்றுலா அமைச்சின் எண்ணக்கருவுக்கமைய மலைநாட்டு சுற்றுலா நவவோதயம் என்ற தொனிப்பொருளில் அட்டன் புகையிரத நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா வசதிகள் மையம் 29.08.2018 அன்று காலை 9.00 மணியளவில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

மலைநாட்டு பகுதிக்கு வரும் சுற்றுலா பிரயாணிகள் எண்ணிக்கையினை அதிகரிக்கும் நோக்கிலும் புகையிரதங்களுடாக வரும் வெளிநாட்டு பிரயாணிகளுக்கு வசதி வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலும் இந்த சுற்றுலா வசதிகள் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலா வசதிகள் மையம் திறப்பு விழாவின் போது வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் இருவர் கலந்து கொண்டு சிறப்பித்தமையும் விசேட அம்சமாகும்.
இந்நிகழ்வுக்கு அட்டன் புகையிரத நிலையத்தின் அதிகாரிகள், அட்டன், அம்பகமுவ, நோர்வூட், கொட்டகலை ஆகிய நகர மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சிங் பொன்னையா உட்பட அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்காக மத்திய சுற்றுலா அமைச்சு 4.2 மில்லியன ரூபா செலவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -