முஹமட் அப்பாஷை அதிபராக நியமிக்குமாறு கோரிக்கை!!!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை மூதூர் மத்திய கல்லூரியில் வெற்றிடம் நிலவும் அதிபர் பதவிக்கு மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தில் கடமை புரியும் இலங்கை கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்த எம்.எம்.முஹமட் அப்பாஸ் என்பவரை அதிபராக நியமிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கோரிக்கை தொடர்பான மகஜரொன்றினை இன்று (இருபத்தாறாம் திகதி) ஜனாதிபதியின் மூதூர் பிரதேச பிரதிநிதி ஏ.ஆர்.இத்ரீஸ், மூதூர் பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் உதவித்தலைவர் எம்.ஏ.றஹீம் மற்றும் மூதூர் பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் கையளித்தனர்.

இம்மஜரில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது

மூதூர் மத்திய கல்லூரியில் இடம்பெற்றுள்ள ஊழல்,மோசடிகள் மற்றும் கடமை துஷ்பிரயோக நடவடிக்கைகளை உடனடியாக விசாரணை செய்யுமாறும் இம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் பிரதிநிதியும்,மூதூர் பிரதேச சபையின் முன்னாள் விஷேட ஆணையாளருமான தேசபந்து அத்யபன கீர்த்தி ஏ.ஆர்.இத்ரீஸ் மற்றும் மூதூர் பிரதேச பள்ளி வாசல்கள் சம்மேளனத்தின் உதவி தலைவரும்,சிறாஜிய பள்ளி தலைவருமான அல்ஹாஜ் எம். ஏ..ரஹீம் ஆகியோர்களால் விடுத்த வேண்டுகோளுக்கே இவ்வாரத்திற்குள் இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தனவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -