இதனால் நாடுமுழுதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவேட்டாவில் வாக்குச்சாவடி அருகே திடீர் தற்கொலைப்படை தாக்குதல் நகழ்த்தப்பட்டது. இதில், மூன்று போலீஸ்காரர்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்பட 26 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 35-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
உடலில் குண்டுடன் வந்த பயங்கரவாதி வாக்குச்சாவடி மையத்திற்கு உள்ளே சென்று தாக்குதல் நடத்த முயற்சி செய்தான். ஆனால், அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பயங்கரவாதியை தடுத்து நிறுத்தும்போது அவன் குண்டை வெடிக்க செய்ததாக போலீஸ் டிஐஜி அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.
மேலும், தாக்குதல் நிகழ்ந்த பகுதியில் வெடிக்காத நிலையில் இருந்த வெடிகுண்டு ஒன்றை வெடிகுண்டு அகற்றும் நிபுணர் குழு செயலிழக்கச் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெறும் தினத்தில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தினால் பாகிஸ்தானில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.