இந்திய முதலீட்டாளர்களின் கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதி அமைச்சர் ஹரீஸ் இந்தியா பயணமானார்.


அகமட் எஸ். முகைடீன்-
ந்தியாவின் டில்லி நகரில் நடைபெறவுள்ள முதலீட்டாளர்களுடனான கூட்;டத்தில் கலந்துகொள்வதற்காக அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை காலை இந்தியா பயணமானார்.
இந்திய முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பாக நடைபெறவுள்ள குறித்த முக்கிய கூட்டத்தில் கலந்து சிறப்பிக்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றே பிரதி அமைச்சர் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.
மேலும் இதன்போது இந்தியாவின் முக்கிய சில அமைச்சர்களுடனான சந்திப்புகளிலும் பிரதி அமைச்சர் ஹரீஸ் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -