இந்தியாவின் டில்லி நகரில் நடைபெறவுள்ள முதலீட்டாளர்களுடனான கூட்;டத்தில் கலந்துகொள்வதற்காக அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை காலை இந்தியா பயணமானார்.
இந்திய முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பாக நடைபெறவுள்ள குறித்த முக்கிய கூட்டத்தில் கலந்து சிறப்பிக்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றே பிரதி அமைச்சர் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.
மேலும் இதன்போது இந்தியாவின் முக்கிய சில அமைச்சர்களுடனான சந்திப்புகளிலும் பிரதி அமைச்சர் ஹரீஸ் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.