மட்டக்களப்பு -காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட மாஹா சொகுசு பஸ் வண்டியும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த கொக்கட்டிச்சோலையை சேர்ந்த வேன் ஒன்றும் கட்டுப்பாட்டை இழந்து கிராண் சந்தியில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் வானின் சாரதி ஸ்த்தலத்தில் உயிரிழந்ததுடன் வான் மற்றும பஸ்ஸில் வந்த பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுளளனர்.
குறித்த விபத்து நடந்த பிரதேசத்தில் பாரிய அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தோற்றமளிப்பதுடன் மதில்கள், மின்கம்பங்கள் சுவர்கள் என்பன சேதமடைந்து காணப்படுகிறது-