யாழ்ப்பாணத்தில் யானையை மோதிய பிக்கப்



பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாண நாகவிகாரை மதிலுடன் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் ரக வாகனம் மோதியதில் சுற்றுமதில் சேதங்களுக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியூடாக ஆரியகுளம் பகுதியை நோக்கிச் சென்ற தனியாருக்குச் சொந்தமான பிக்கப் ரக வாகனத்தை ஆரியகுளம் சந்தியில் அமைந்துள்ள வீதிச் சமிக்ஞையை கடந்த செல்வதற்காக சாரதி அதிவேகமாக செலுத்தியமையால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதனால் சுற்றுமதிலுடன் காணப்பட்ட புத்தர் சிலையை அழகுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பம் தகர்த்தெறியப்பட்டதுடன் மதிலில் செதுக்கப்பட்டிருந்த யானைகள் சிலவும் பெரும் சேதங்களுக்குள்ளாகியுள்ளன..

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன் விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் தெரியவருகின்றது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -