Rasad Mohamedகடந்த சில வருடங்களாக பல்வேறு சமூகப் பணிகளை செய்துவரும் அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒன்றான கிண்ணியா பவட்டி விஷனினின் (Kinniya Poverty Vision) புதிய காரியாலய திறப்புவிழா நிகழ்வு இன்று 25.02.2018 பணிப்பாளர் எஸ். சாஜஹான் தலைமையில் கிண்ணியா அல் - அக்ஸா வீதியில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதீதியாக கிண்ணியா நகர சபையின் ரஹ்மானியா, சின்னக் கிண்ணியா வட்டார உறுப்பினர் எம்.எம். மஹ்தி அவர்கள் கலந்து கொண்டார். அத்துடன் பல சமூக ஆர்வலர்கள், நலன் விரும்பிகள், பிரதேச மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இன் நிகழ்வில் பிரதம அதீதியாக கலந்து கொண்டு உரையாற்றிய எம்.எம். மஹ்தி அவர்கள் எதிர்வரும் காலங்களில் தமது கிண்ணியா பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளுடன் மாத்திரம் தனது அரசியல் பயணத்தை முடித்துக் கொள்ளாமல் தனது பதவியை சமூக சேவை எனக்கருதி கல்வி, கலாசாரம், ஆன்மிகம், வாழ்வாதாரம் போன்ற அணைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் அடையக்கூடிய ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு தான் முழு மூச்சாகச் செயற்படுவேன் என்ற உறுதி மொழியையும் அளித்தார்.