ஹஸ்பர் ஏ ஹலீம்-
உலகெங்கும் நேற்று(13) இந்துக்களால் கொண்டாடப்படும் மகாசிவராத்திரி விழாவினையடுத்து திருகோணமலையில் பிரசித்தி பெற்ற திருக்கோனேஸ்வரா ஆலயத்திலும் விசேடமான பூஜைகள் இடம் பெற்றன. இதில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம மற்றும் ஆளுனரின் பாரியார் தீப்தி போகொல்லாகம உட்பட கிழக்கு மாகாண அரச திணைக்கள உயரதிகாரிகள் எனப் பலரும் பங்கு கொண்டு விசேட பூஜையில் கலந்து கொண்டார்கள்.
இதன் போது மகா சிவராத்திரியை முன்னிட்டு பாடசாலை மாணவ மாணவிகளுக்கிடையே நடாத்தப்பட்ட கட்டுரை பேச்சுப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவ மாணவிகளுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன இப் பரிசில்களை கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம மற்றும் அவரது பாரியார் தீப்தி போகொல்லாகம போன்றோர்கள் வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -