பத்திரிகைகள் ஏற்றி சென்ற லொறி கொட்டகலையில் விபத்து


க.கிஷாந்தன்-

கொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு பத்திரிகைகள் ஏற்றி சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

11.01.2018 அன்று காலை 6 மணியளவில் அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை சுரங்கப்பாதைக்கு அருகில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

லொறியின் சாரதிக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டதன் காரணமாக வீதியை விட்டு விலகி கற்பாறையின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியோடு உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பிய இவர்கள் பத்திரிகைகளை வேறொரு லொறிக்கு மாற்றம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். அத்தோடு வீதி போக்குவரத்துக்கான பாதுகாப்பு சமிஞ்கைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -