கணவனை கோடாரியால் வெட்டி கொலை செய்துவிட்டு கோடாரியுடன் பொலிசுக்கு சென்று மனைவி

நுராதபுரம், பிரதான வீதியில் அருனோதாகம பிரதேசத்தில் கோடரியால் வெட்டி கணவனை கொலை செய்துவிட்டு கோடாரியுடன் சென்று மனைவி பொலிஸில் சரணடைந்த சம்பவம் ஒன்று இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.

நிலுக சஞ்ஜீவ விதானகே என்ற 46 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

ஹபரணை அநுராதபுரம் பிரதான வீதியில் ஹோட்டல் ஒன்றை நடத்திச் சென்ற இந்த தம்பதியினர், அடிக்கடி முரண்பட்டுக் கொள்வதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இன்று (17) அதிகாலையில் இருவரிடையே ஏற்பட்ட முரண்பாடு தீவிரமடையவே, கணவனை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த மனைவி கோடாரியுடன் ஹபரணை பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் இந்த சம்பவம் இடம்பெற்ற போது பிள்ளைகள் உறவினரின் வீட்டில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த நபரின் இரண்டாவது மனைவி இதுவென்பதுடன், அவர் முன்னதாக இலங்கை இராணுவத்தில் பணியாற்றியவர் என்பது தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர் கெக்கிராவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -