பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களின் முயற்சியினால் கொண்டுவரப்பட்ட மூன்று மாடிக் கட்டிடம் திறந்து வைப்பு



எம்.ரீ. ஹைதர் அலி-

ட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின், காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள, மட்/மம/காத்தான்குடி பதுரியா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடத்தொகுதி மற்றும் அனர்த்த நேர சமையலறை கட்டிடம் என்பன 2017.11.16ஆந்திகதி திறந்து வைக்கப்பட்டது.

இத்திறப்பு விழா நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம அவர்கள் கலந்துகொண்டதோடு, விஷேட அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மற்றும் இலங்கை மற்றும் மாலை தீவிற்கான ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் உள்நாட்டு இராணுவ பிரிவிற்கான துணை இயக்குனர் ரிச்சட் ஸ்டன்லீ, மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம். நிஸாம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இப்பாடசாலையில் உள்ள இடவசதி பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. நசீர் அஹமட் அவர்களுடன் இணைந்து முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக ஐக்கிய அமெரிக்க அமைதிக்கான கட்டளை மையத்தின் நிதி அனுசரணையின் கீழ் ஐக்கிய அமெரிக்க இராணுவத்தின் பொறியியல் பிரிவின் செயற்படுத்தலில் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டிடமானது பன்னிரண்டு வகுப்பறையுடன் கூடியதாக நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக இப்பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்படுவதோடு எதிர்காலத்தில் மேலும் அதிகமான மாணவர்களை உள்வாங்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -