இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் சந்திப்பு


அப்துல்சலாம் யாசீம்-

லங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர்
பிரைஸ் ஹட்சிசனிற்கும் (Brycy Hutchesson) கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவிற்கும் இடையிலான சந்திப்பொன்று திருகோணமலையில் ஆளுனர் அலுவலகத்தில் நே ற்று (29) பிற்பகல் 5,30மணியளவில் இடம் பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் அவுஸ்திரேலிய நிதியுதவியுடன் மேற் கொள்ளப்பட்டு வரும் சுற்றுலா,உள்ளுராட்சி அபிவிருத்தி மற்றும் சிறு கைத்தொழில் துறை தொடர்பான அபிவிருத்தி திட்டங்கள், கிழக்கு மாகாணத்தில் யுத்தத்திற்கு பின்னரான சமூக பொருளாதார அரசியல் மாற்றங்கள் தொடர்பாக இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.

கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு அவுஸ்திரேலியா வழங்கும் பங்களிப்பிற்கு நன்றியை தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம கிழக்கு மாகாணத்தின் கல்வி,மருத்துவம் மற்றும் மனித வள மேம்பாட்டிற்கு அவுஸ்திரேலியா அரசு ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -