எருமை மாட்டுடன் மோதிய அம்புலன்ஸ்..!



அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியுலன்ஸ் வண்டி எருமை மாட்டுடன் நேற்றிரவு (06) மோதி விபத்துக்குள்ளானதில் வாகனம் சேதமடைந்துள்ளதாக கோமரங்கடவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையிலிருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு சென்ற வேளை வாகனத்தை நோக்கி எருமை மாடு வேகமாக வந்து மோதியதாகவும் அதனால் இவ்விபத்து இடம் பெற்றதாகவும் அம்பியுலன்ஸ் சாரதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் தெரியவருகின்றது.

விபத்தில் சிக்கிய எருமை மாடு அவ்விடத்தில் வீழ்ந்து கிடப்பதாகவும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்சென்ற நோயாளியை மஹதிவுல்வெவ பிரதேச அம்பியுலன்ஸ் வண்டியில் கொண்டு சென்றதாகவும் கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -