மு.இராமச்சந்தின்-
நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்து மஸ்கெலியா நகரில் மகிழ்ச்சி கொண்டாட்டம் 05.11.201 இடம்பெற்றது.
நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகளுக்கு மேலதிகமாக நான்கு பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட்டுதையிட்டு இக் கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அமைச்சர் பழனி திகம்பரத்தின் இணைப்புச்செயலாளர் நகுலேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கொண்டாட்டப்பேரனியில் மத்திய மாகாண சபை உறுப்பினர் சரஸ்வதி சிவகுரு உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளரேகளும் கலந்துகொண்டனர்.
மஸ்கெலியா எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து பேரணியாக மஸ்கெலியா நகர மத்தியை சென்றடைந்தது இதன் போது பிரதேச சபைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்த தமிழ் முற்போக்கு கூட்டனியின் அமைச்சர்களான திகாம்பரம் ராதாகிருஸ்னன் மற்றும் மணோகனேசன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்தனர்.