வாழைச்சேனை கல்குடா வீதி இந்துக் கல்லூரிக்கு முன்பாக சனிக்கிழமை (21) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கிண்ணையடியைச் சேர்ந்த எஸ். புவிதன் வயது (18) உயிரிழந்துள்ளதுடன் சம்பவத்தில் காயமுற்ற இருவர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கல்குடாவிலிருந்து வாழைச்சேனை நோக்கி மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இளைஞர்களின் முன்னால் மீன் ஏற்றிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த விபத்து தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரணித்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.